யாழில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்!!

1097

யாழ். கிராமிய சிவில் பாதுகாப்பு குழு தலைவருடைய வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் வாள்களுடன் நுழைந்த சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் கொண்டு வந்ததாக கூறப்படும் வாள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸாரினால் உருவாக்கப்பட்டுள்ள கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் துவாரகன் என்பவருடைய வீட்டுக்குள் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து, துவாரகன் அயல் வீட்டாருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள துவாரகனின் வீட்டுக்கு உடனடியாக பொலிஸார் வருகை தந்த நிலையில் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

எனினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட நிலையில்

வாள் ஒன்றையும், செருப்பு ஒரு சோடியையும் மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.