வவுனியாவில் கசிப்பு காய்ச்சியவர் பொலிசாரினால் அதிரடியாக கைது!!

312

 
வவுனியா நெளுக்குளம் பொலிஸார் இன்று (13.12.2016) காலை கசிப்பு காய்சிய ஒருவரை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

இன்று (13.12.2016) காலை 6 மணியளவில் வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான நிரோஷன் (88567), வீரசிங்க (34690 ), ரூபசிங்க(53595 ), பத்திரன(74480 ) ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் டிஸ்கோ சந்தி, தம்பனைப்புளியங்குளம் சந்தி காட்டுப்பகுதிக்குள் மறைத்து கசிப்பு காச்சிய 39 வயதுடைய ஒருவரையும் ஆறு போத்தல் கசிப்பு , கோடா , கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் 14.12.2016ம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.