வவுனியாவில் 33 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு மக்கள் கோரிக்கை!!

252

 
வவுனியா கணேசபுரம் பத்தினாதபுரம் பகுதியில் நேற்று (12.12.2016) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த பொது மக்கள் தமது நீண்டகாலகோரிக்கையினை அரச அதிகாரிகள் தீர்த்துவைக்கவில்லை, தமது அடிப்படைத் தேவையான வீட்டுத்திட்டத்தில் தம்மை பறக்கணித்துவருவதாகவும் தெரிவித்து ஊடகங்களுக்கு தமது நிலையினைத் தெரிவித்து இப்பிரச்சினையினை வெளிக்கொணருமாறும் கோரியுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பி வந்த குடும்பங்கள் உட்பட 33 குடும்பங்கள் வீடுகளின்றி தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நீண்டகாலமாக வசித்து வருவதாகவும் இதில் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரக்காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தமது இக்கோரிக்கையினை அரச அதிகாரிகள் கண்டும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் இக்கிரமத்திற்கு கிராமசேவையாளர் பணியாற்ற வருவதில்லை, அருகிலிருக்கும் கிராமத்திற்கு இப்பகுதி மக்கள் கால் நடையாக சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

33 குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து தமது தேவைகளைப் பூர்ர்திசெய்து தருமாறு கோரியுள்ளனர்.