வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி பெற்றோர் தின விழாவும் கலை விழாவும்!!

343

 
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி பெற்றோர் தின விழாவும் கலை விழாவும் நேற்று முன்தினம் (11.12.2016) காலை 9 மணிக்கு நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் க.வேலாயுதபிள்ளை (பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிக்கட்டமைப்புத் தலைவர்), செந்தில்நாதன் மயூரன் ( வடமாகாணசபை உறுப்பினர்) , வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், கோ.தர்மபாலன்(முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு), கி.நந்தபாலன் (அதிபர், பூந்தோட்டம் மகாவித்தியாலயம்), பெற்றோர்கள், பொதுமக்கள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர் கௌரவிப்பு , மாகாணமட்ட மாணவர் கௌரவிப்பு , பெற்றோர் கௌரவிப்பு, விருந்தினர் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.