வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் வசம் இருந்த முகாம் அகற்றப்பட்டது!!

231

 

வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத் தொழிச்சாலைக்கு அருகில் நிலை கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையின் தமது பாவனையிலிருந்த இராணுவ முகாமினை நேற்று முன்தினம் (11.12.2016) அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.

கடந்த 19 வருடமாக யுத்தம் இடம்பெற்றபோதிலிருந்து இப்பகுதியில் விஷேட அதிரடிப்படையினர் முகாமினை அமைத்து தமது பாவனையில் வைத்திருந்தனர்.

அத்தோடு வவுனியா செட்டிகுளம் பிரதான வீதியில் சோதனைச்சாவடியாகவும் யுத்த காலத்தில் இருந்து வந்துள்ளது.

வன இலாகா திணைக்களத்திற்குரிய குறித்த காணியிலிருந்து இராணுவத்தினர் முகாமினை அகற்றி தமது பொருட்களை ஏற்றிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.