வவுனியாவில் மோட்டார், ஜெனரேற்றர் திருடிய மூவர் கைது!!

302

வவுனியாவில் தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஜெனரேற்றர் போன்றவற்றை திருடிய மூன்று இளைஞர்களை ஓமந்தை பொலிசார் இன்று(13.12.2016) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா ஓமந்தையிலிருந்து சேமமடு செல்லும் பிரதான வீதியில் ஆட்கள் இல்லாதவீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஜெனரேற்றர் என்பனவற்றை திருடியுள்ளதாக கடந்த வாரம் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு ஒன்றினை வீட்டின உரிமையாளர் மேற்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் ஓமந்தை பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஓமந்தை மற்றும் பென்னாவரசன்குளம் பகுதிகளிலுள்ள மேசன் தொழில் செய்யும் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து திருட்டுப்போன தண்ணீர் இறைக்கும் மோட்டார் மற்றும் ஜெனறேற்றர் என்பனவற்றையும் நேற்று (12.12.2016) மீட்டுள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.