காலி – வந்துரும்ப பகுதியில் சுப்பர் மார்க்கெட்டில் கைவரிசையை காட்டிய பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுப்பர் மார்க்கெட்டிலிருந்து பால்மா பைக்கற்றுக்களை திருடியுள்ளார். சுப்பர் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கமராவின் காட்சிகளை வைத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்தே குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி கமராவின் காட்சிகளை வைத்து பார்க்கும் போது 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த திருட்டில் ஈடுப்பட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்னை பந்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை இந்த மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வந்துரும்ப பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.






