வவுனியா சுந்தரபுரத்தில் குழு மோதல் : இருவர் வைத்தியசாலையில்!!

233

வவுனியா சுந்தரபுரத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று (12.12.2016) மாலை ஏற்ப்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (12.12.2016) மாலை 5 மணியளவில் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இளைஞன் மீது மது போதையிலிருந்த மூன்று இளைஞர்கள் இடுப்புப்பட்டியால் ( பெல்ட்) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தாக்குதல் மேற்கொண்டவர்களை தள்ளிவீழ்த்தியுள்ளார். இச் சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.