வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி பொலிசாரால் முறியடிப்பு!!

1076

 
வவுனியாவில் இன்று(13.12.2016) முற்பகல் நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரணப்பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறியடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா வடக்கு நெடுங்கேணி, சிவாநகர் பகுதியிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு குறித்த பாடசாலை மாணவியை வருமாறு இளைஞன் இன்று முற்பகல் அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் வவுனியா நகரிலிருந்து பேரூந்தில் சென்று அப்பகுதியில் இறங்கி இருவரும் குறித்த காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

மாணவிகள் இருவர் துவிச்சக்கரவண்டியில் சென்று காட்டுப்பகுதிக்குச் செல்லும் இடம் ஒன்றில் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றபோது, இச்சம்பவங்களை தொலைவிலிருந்து குடும்பப் பெண்மணி அவதானித்து கொண்டிருந்துள்ளார்.

இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து நெடுங்கேணிப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இருமாணவிகள், வவுனியா இளைஞன் மற்றும் துவிச்சக்கரவண்டி என்பனவற்றை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குச் கொண்டு சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.