அவுஸ்திரேலியாவில் மாயமான இலங்கை இளைஞன் : தேடும் நடவடிக்கை தீவிரம்!!

731

அவுஸ்திரேலியா ஆற்றில் வீழ்ந்து மாயமான இலங்கை பிரஜையை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை குறித்த இலங்கை பிரஜை (Janaka Kumara Jayasooriya Mudiyanselag) தனது நான்கு நண்பர்களுடன் Carlton Gorge ஆற்றுக்கு சென்றதாக அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜை, மிக உயரத்திலிருந்து ஆற்றில் செங்குத்தாக பாய்ந்துள்ளார் என்றும் 20 விநாடிகளின் பின்னர் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்,காணாமல் போன நண்பர்களில் ஒருவர் அதே உயரத்திலிருந்த பாய்ந்துள்ளார் அப்போதும் குறித்த நண்பரை கண்டுப்பிடிக்க முடியவில்லை ஏதோ தவறு நடந்துள்ளது என அவரது நண்பர் கூறியுள்ளார்.

நண்பரை கண்டுப்பிடிப்பதற்காக அவர்கள் 40 நிமிடங்கள் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை, இந்த விடயம் குறித்து இலங்கையில் உள்ள ஜனாக குமாரவின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த இலங்கை பிரஜையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Kununurra பகுதிக்கு விசேட மூன்று பொலிஸ் படகுகள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.