வவுனியாவில் இன்று (13.12.2016) இரவு 8 மணியளவில் இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று (13.12.2016) இரவு 8 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணம் மேற்கொண்போது அதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் பாதையில் மற்றைய பக்கத்திற்கு மாற முற்ப்பட்ட வேளை இரு மோட்டார் சைக்கில்களும் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஒரே குடும்பமாக பயணித்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகிலேஸ்வரன் வயது 35, பிரியதர்சினி வயது 30, திஷா வயது 05, திஷாளன் வயது 02 ஆகிய நால்வரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குடும்பத்தலைவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.