கடலில் தத்தளித்த 1,164 அகதிகள் இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்பு!

534

மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,164 அகதிகளைத் தாம் மீட்டதாக இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (12.12.2016) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை மீட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு இரப்பர் படகுகளிலும் ஒரு மரப்படகிலும் பயணித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடலோர பாதுகாப்புப் படையினர், ரேடியோ கருவி மூலம் நாவ்ஃபோர் மெட் மிஷன் என்கிற ஐரோப்பிய யூனியனின் மீட்புக் கப்பல்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மீட்புக் கப்பல்களும் படகுகளும் உடனடியாக குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதையடுத்து அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் லிபியாவிலிருந்து பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.

தம்முடன் பயணித்தவர்களில் 6 பேர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.