சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்றார் : அம்ருதா!!

612

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவரின் மரணம் தொடர்பில் பல தரப்பிலும் புதிது புதிதான காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கௌதமி பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் மரணம் பற்றிய தகவல் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் சகோதரி மகள் அம்ருதா ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விபட்டதும் அவரை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். வைத்தியசாலைக்கு சென்ற போதும் பார்க்கவிடாமல் சசிகலா என்னை தடுத்துவிட்டார்.

அம்மாவை இப்போது பார்க்க முடியாது என மூன்று முறை காவலாளிகளை வைத்து என்னை திருப்பி அனுப்பிவிட்டார்.வைத்தியசாலையில் அப்படி என்ன ரகசிய சிகிச்சை என்று தெரியவில்லை.

அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை அரசு விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு சசிகலா விஷம் கொடுத்தது உண்மையாக தான் இருக்கும். சசிகலா ஜெயலலிதா அம்மாவின் பெயரை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார் என அம்ருதா கூறியுள்ளார்.