வவுனியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கலைஞர்களை வரவேற்கும் நிகழ்வு!!

900

 
கொழும்பில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு வருகைதந்தை இந்திய இஸ்லாமிய தமிழ் இலக்கிய கலைஞர்கள் இன்று 14.12.2016 காலை 11.30 மணியளவில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் திரு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர்கள் சஙகத்தில் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே .மஸ்தான், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார், வவுனியா மாவட்ட கலைஞர்கள் வவுனியா இஸ்லாமிய கல்வியாளர்கள், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வருகைதந்த கலைஞர்களை வரவேற்று வவுனியா பண்பாட்டினையும் எடுத்துரைத்தனர்.

வவுனியா கலைஞர்களுடனான சந்திப்பினை நிறைவுசெய்த இந்திய கலைஞர் குழவினர் யாழ்ப்பாணத்தினை நோக்கிச் சென்றனர்.

இம்மாநாட்டிற்கு வருகைதந்த கலைஞர்கள் இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று கலைஞர்களைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.