தலைக்குள் கத்தி ஊடுருவிய நிலையில் வைத்தியசாலைக்கு நடந்து சென்ற இளைஞர்!!

663

கத்­தியால் குத்­தப்­பட்ட நபர் ஒருவர், தலைக்குள் ஊடு­ரு­விய கத்­தி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்ற சம்­பவம் தென் அமெ­ரிக்க நாடான பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.

கெம்போஸ் ஒயார்ஸ் எனும் 28 வய­தான இளைஞர் டெக்ஸி சார­தி­யாக பணி­யாற்­று­பவர். இவரை ஹென்றி சல்­டனா சௌஸா எனும் நபர் கத்­தியால் குத்­தி­ய­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­ சம்­ப­வத்­தின்­போது கெம்போஸ் ஒயார்ஸின் தலையின் பின்­புறம் கத்தி ஊடு­ரு­வி­யது. எனினும், கத்தி தலையிலிருந்த நிலை­யி­லேயே அவர் வைத்­தி­ய­சா­லைக்கு நடந்துசென்றார்.

பல மணித்­தி­யால சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் ஒயார்ஸின் தலையிலிருந்து அக்கத்தி அகற்றப்பட்டது.