உலக அதிசயங்களில் ஒன்றாக காணப்படும் ஈஃபிள் கோபுரம் இன்று இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகர முதல்வர் ஆன் இல்தாகோ இதனை தெரிவித்துள்ளார்.
சிரிய நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கிலும், அந்நாட்டு மக்கள் யுத்த சூழ்நிலையில் இருந்து வெளிவரவேண்டும் என்பதற்காகவும் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரிய நாட்டில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பலரும் நாட்டை விட்டு வெளியேறிவருன்றனர்.
இந்நிலையிலேயே, இன்றைய தினம் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அனைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக ஈஃபிள் கோபுர ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பொது மக்களின் பார்வைக்காக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






