வவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!!

519

 
புதிய அரசியலமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விரிவுரைகளும் கலந்துரையாடலும் நேற்று முன்தினம் (13.12.2016) வவுனியா மாவட்ட அரச அதிபரின் கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளர் திருமதி.கோ.மதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் திரு.தவராஜா ஆகியோர் விரிவுரைகளுடனான கருத்துகள் அறியும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.