வவுனியாவில் சோலைவரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்!!

836

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக சோலைவரி அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் முன்வந்து சோலைவரியை செலுத்த முன்வர வேண்டும், வவுனியா நகரசபைக்கு வருமானம் கிடைத்தால் மட்டுமே எமது நகரத்தினை அழகுபடுத்த முடியும் எனவே நிலுவையிலுள்ள வருமானவரி, சோலைவரியினை அறவிடுவதற்கு எமது உத்தியோகத்தர்கள், நடுக்கட்டல் உத்தியோகத்தர்கள் புதிதாக இணைக்கப்பட்டு வீடுவீடாகச் சென்று நிலுவையிலுள்ள சோலைவரிப் பணத்தினை அறவிடும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும்,

கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் சோலைவரிப் பணம் நிலுவையிலுள்ளதாகவும் இப்பணத்தினை செலுத்தும் பட்சத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியினை மேலும் அழகுபடுத்த முடியும் என்றும் சோலைவரியினை செலுத்தும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுடன் சோலைவரி யினை செலுத்தத்தவறின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நகரசபை செயலாளர் மேலும் தெரிவித்தார்.