வவுனியா செட்டிகுளம் மக்கள் தீர்வு கிடைக்குவரை உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

1025

 
வவுனியா செட்டிக்குளம் அடம்பன்குளம் பிரதேச மக்கள் இன்று (15.12.2016) செட்டிக்குளம் வீதியிலுள்ள அம்மன் ஆலயத்திலினுள் காலை 8.30 மணி தொடக்கம் தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கிராமத்திற்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இவ் வீட்டுத்திட்டம் வேறு கிராமத்தினை நோக்கி செல்வதாகவும் தெரிவித்து இக் கிராமத்தை சேர்ந்த 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தேர்தல் காலங்களில் மட்டுமா தெரியும்? , எமது மதிப்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே எங்கள் கிராமம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? எமது கிராமத்திற்கான முடிவு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஐயா வருகை தந்து எமக்கு உறுதியளிக்க வேண்டும் என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.