சிறு­மி­க­ளுக்கு போதைப்­பொருள் கொடுத்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கம் : பெண்­ணுக்கு 9 வருட சிறை!!

560

சிறு­மி­க­ளுக்கு போதைப் பொருட்­களைக் கொடுத்து அவர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் குழு­வொன்றைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 9 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

32 வய­தான லெய்லா கஸம் எனும் இப்­ பெண்ணும் அவரின் காத­ல­ரான போல் மைக்கல் சில்­வர்தோர்ன் (36) என்­ப­வரும் லண்­டனில் நடை­பெற்ற கேளிக்கை விருந்­தொன்­றின்­போது 15 வய­தான சிறு­மிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இவர்கள் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் தலை­ம­றை­வா­கினர். ஸ்பெய்­னுக்கு தப்பிச் சென்ற லெய்லா கஸம், அங்­குள்ள பண்­ணை­யொன்றில் பணி­யாற்றி வந்தார்.

இதற்­கி­டையில் லெய்லா கஸ­மையும் போல் மைக்கல் சில்­வர்­தோர்­னையும் கண்­டு­பி­டிப்­ப­தற்கு உத­வு­மாறு பிரித்­தா­னிய பொலிஸார் கோரிக்கை விடுத்­தனர்.

இதை­ய­டுத்து, லெய்லா பணி­யாற்­றிய பண்­ணையின் உரி­மை­யாளர் அவரை அடை­யாளம் கண்டு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­வித்தார். அதன்பின் பிரிட்­ட­னுக்கு அழைத்துவரப்­பட்ட லெய்லா கஸ­முக்கு 9 வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அவரின் காதலரான போல் மைக்கல் சில்வர் தோர்னை அதிகாரிகள் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.