வாய்த் தர்க்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

520

ஓபநாயக்க – தொலகந்த பகுதியில் இன்று (15.12) இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததையடுத்து ஒருவர் மற்றைய நபரை கண்ணாடி போத்தல் ஒன்றை உடைத்து தாக்கியுள்ளார்.

படுகாயத்திற்கு உட்பட்ட நபரை பெல்மடுல்லை வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குரெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காயமடைந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஹாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.