வங்கிக் கடனை அறவிடுவதற்கு சென்ற முகவரை விளக்குமாறினால் அடித்து பல்லை உடைத்த பெண்!!

535

மாவ­னல்ல நக­ரி­லுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட கால­மாக அதனை மீளச்­செ­லுத்­தாமல் இருந்த பெண் ஒரு­வரை வங்கி முகவர் தேடிச்சென்­ற­ போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்­கு­மா­றினால் தாக்கி காய­ம­டையச் செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வங்கி ஒன்­றி­லி­ருந்து கடன்­பெற்று அதனை திருப்பி செலுத்­தாமல் இருந்த பெண் ஒரு­வரை தேடி வங்கி முக­வ­ரொ­ருவர் தனது உத­வி­யா­ள­ரொ­ரு­வ­ருடன் அர­னா­யக்க, வெலி­மன்ன பிர­தே­சத்தில் உள்ள அவ­ரது வீட்­டுக்கு சென்று அவ­ரிடம் கடன் தவ­ணைப்­பணம் செலுத்த தவ­றி­யமை தொடர்பில் விசாரித்துள்ளனர்.

அதன்­போது கோப­முற்ற அப்பெண் விலக்­கு­மா­றினால் வங்கி முக­வரின் முகம் மற்றும் தோற்­பட்டை பகு­தி­களில் பல­மாக தாக்­கி­யுள்ளார். இத்­தாக்­கு­தலில் காய­முற்ற வங்கி முகவர், அர­நா­யக்க மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் கேகாலை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­ற­பட்­டுள்ளார்.

தாக்­கு­த­லுக்கு இலக்­கான வங்கி முக­வரின் தோற்­பட்டை எலும்­பொன்று முறிந்­துள்­ள­துடன் பற்கள் இரண்டு உடைந்­துள்­ள­தா­கவும் வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றனர்.

21 வய­தான இவ்­வங்கி முகவர் கடன்­கா­ரரைவிசா­ரிக்கும்போது அய­ல­வர்­க­ளுக்கு கேட்கும் விதத்தில் சத்தமிட்டதனால் கடனாளியான பெண் கோபமுற்று தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.