அணியில் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் யுவராஜ் சிங்!!

330

Yuvraj-Singh

இந்திய அணியின் யுவராஜ் சிங் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மோசமான போம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் யுவராஜ் சிங். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்கு போட்டிகளுமே சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 15ம் திகதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 17ம் திகதி 2வது போட்டியும், 19ம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறும்.

செப்டம்பர் 21ம் திகதி 20-20 போட்டி நடைபெறும். இதனையடுத்து தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில், பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.