எச்சரிக்கை : நாட்டில் வறட்சியான காலநிலை தொடரும்!!

543

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை எதிர்வரும் இரு நாட்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் மழை ஏற்படலாம். மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

இந்நிலையில் இடியுடன்கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசக்கூடும். மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.