டெங்கினால் பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் அங்கொடை வைத்தியசாலையில் பரீட்சை எழுதுகின்றனர்!!

213

க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றி­யுள்ள மாண­வர்­களில் 12 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்­பட்டு அங்­கொடை தொற்று நோய் வைத்­தி­ய­சா­லையில் ­அனும­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்­காக அவ்­வைத்தியசாலையிலேயே பரீட்சை நிலை­ய­மொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, டெங்கு நோயா­ளர்கள் எண்­ணிக்கை அதி­க­ரிப்பில் சிறி­ய­ள­வி­லான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்­று­வரை 47, 900 டெங்கு நோயா­ளர்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் 77 பேர் டெங்­கினால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­ட­மா­னது தொடர்ந்தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

அதற்­க­மைய முப்­ப­டை­யினர், பொலிஸார், சிவில் பாது­காப்பு படை­யினர் மற்றும் சுகா­தார சேவையாளர்கள் ஒன்­றி­ணைந்து புகை விசி­றுதல் மற்றும் வீடு­களை பரி­சோ­தனை செய்தல் போன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 4 நாட்­க­ளினுள் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்­டத்­துக்­க­மைய 77,728 வீட்டு சூழல்கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதன்­போது, டெங்கு நுளம்பு குடம்­பிகள் காணப்­பட்ட 1140 சுற்றுச் சூழல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இவற்றில் 9188 இடங்­களை சுத்தம் செய்­யப்­பட நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் 2,882 வளா­கங்­க­ளுக்கு அறி­வித்­தல்கள் மற்றும் இவ்­வா­றான குடம்­பிகள் பெரு­கத்­தக்க சூழலை வைத்­தி­ருந்த 616 பேருக்கு வழக்கும் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, இம்­முறை க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றி­யுள்ள மாண­வர்­களில் 12 பேர் டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்டு அங்­கொடை தொற்று நோய் வைத்­தி­ய­சாலை (ஐ.டி.எச்.) இல் அனுமதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்­காக அவ்­ வைத்தியசாலையி­லேயே பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்களது உடல்நிலை தொடர்பில் வைத்தியர்கள் தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டுவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.