தென் ஆபிரிக்காவை வீழ்த்துவோம் : தவான் நம்பிக்கை!!

373

dhavan

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையில் பிரச்னை ஏற்பட்டதால் இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கு முன்னதாக இந்திய ஏ அணி தென் ஆபிரிக்கா சென்று விளையாடியது. இதில் ஷிகர் தவான், ரெய்னா, ரோகித் சர்மா போன்றோர் இடம் பெற்று இருந்தனர்.

இதில் சிறப்பாக ஆடிய தவான் ஒருநாள் போட்டியில் 150 பந்தில் 248 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த ஓர் ஆண்டாக எனது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறேன். வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும்போது அங்குள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும்.

தென் ஆபிரிக்க மைதானங்கள் பவுன்சர், வேகம் நிறைந்ததாக உள்ளன. அங்கு விளையாடியது நல்ல பயன் அளிக்கும். தென் ஆபிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.