வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயம்!!

223

 
வவுனியா மன்னார் வீதி, குளுமாட்டுச்சந்தியில் இன்று (17.12.2016) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று (17.12.2016) நண்பகல்12 மணியளவில் மன்னார் வீதி குளுமாட்டுச்சந்தியில் மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் அதன் பின்னால் பயணித்த இலக்கத்தகடு அற்ற புதிய பட்டா ரக வாகனம் அதற்க்கு முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவணடி மீது மோதியதில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டினை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான தர்மராசா நந்தகுமார் (48 வயது) படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் மற்றும் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.