எதிர்வரும் திங்கட்கிழமை 19.12.2016 காலை 7.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட மட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு இவர்கள் மீது விருப்புள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ….!
மாற்றுத்திறனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்வது மிக அவசியம் எனக்கருதுகிறோம் ….
.மாற்றுத்திறனாளிகளுக்கான அரச உதவி பெறும் குடும்பங்கள் தவறாது கலந்து கொள்வது மிக முக்கியமானது……
.பி.ப 1.30 மணிக்கு மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வரும் ….!
நீங்கள் பங்குபற்ற முடியாவிட்டாலும் பார்ப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உரிமையுடன் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து அனுப்பி வையுங்கள்..
எல்லோருமே கலந்து கொண்டு இவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளலாம்.
ஏனெனில் இவர்கள் சிறப்புத்திறனாளிகள் . இவர்கள் உங்களது வரவையும் ஆதரவையும் மட்டுமே வேணடி நிற்கின்றனர்.. இது சமூகம் சார்ந்த நிகழ்வு யாருமே விலகி நினைக்க எண்ணாது கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கரம் கொடுங்கள் …!
நாங்கள் ஏற்பாட்டாளர்கள் மட்டுமே இதுவே உங்களுக்கான தனிப்பட்ட அழைப்பாக இருக்கட்டும்…இந்த ஒரு அரை நாள் பொழுதை இவர்களுக்காக செலவிடுங்கள்.
….நன்றி …
விழாக்குழு,!
வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம்