சாவகச்சேரியில் கோர விபத்து : பேருந்து – வான் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாப மரணம்!!

760

 
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இன்று(17.12.2016) சனிக்கிழமை)மதியம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அரச பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து சென்ற ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

வானில் வந்த 7 பேர் உள்ளடங்களாக 10 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.