டுபாயில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!!

257

டுபாயில் இறந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மாலை சந்திவெளியிலுள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இளையதம்பி சூரியகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக தெரியவருகிறது.

இவர் தொழில் நிமித்தம் காரணமாக டுபாயில் ஒரு கம்பனியில் வேலை செய்ததாகவும், விபத்தொன்றின் மூலம் உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கை கிடைக்க பெற்றுள்ளதாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் இரண்டாம் திகதி அவர் இறந்த தகவல் சக நண்பர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்தாகவும், அதனையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் மூலம் டுபாயில் இருந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டுவந்ததாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.