வவுனியா பிரதேச கலாச்சார விழா 2016!!

516

 
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகமும், கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சாரவிழா 2016 வவுனியா பிரதேச செயலககலாச்சார மண்டபத்தில் கலா குமரப்பா அரங்கில் நேற்று (17.12.2016) காலை 9 மணிக்கு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் (உப தலைவர் பிரதேச கலாச்சார பேரவை) தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஆய்வரங்கும் இயலரங்கும் எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கில் தொல்லியல் ஆய்வாளர் அருணா செல்லத்துரை வவுனியா பிரதேச தொல்லியல் வரலாறு, நா. தியாகராஜா வவுனியா பிரதேச கிராமிய கலைகள். கலாபூசணம் சி. தயமந்தி தமிழ்க்கவி வவுனியா பிரதேசத்தின் நாட்டுக்கூத்தும் நாட்டாரிசையும், ஞா. ஜெயகாந்தன் வவுனியா பிரதேசத்தின் ஊர்ப்பெயராய்வு சு. ஜெயச்சந்திரன் வவுனியா பிரதேசத்தின் பண்பாட்டு வழக்காறுகள். கேள்வி நேரம் , கவியரங்கம், பட்டிமன்றம் என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரு திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்பின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.