கொல்கத்தாவில் பள்ளி மாணவியை 5 மணி நேரம் கழிவறையில் அடைத்து வைத்து பகிடிவதை செய்ததால் மாணவி உயிரிழந்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 11 வயது பள்ளி மாணவியிடம் மூத்த மாணவர்கள் 100 ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
பணம் தர மறுத்ததால் அந்த மாணவியை கழிவறையில் அடைத்து பூட்டியுள்ளனர். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு இந்த செய்தி அறிந்து அந்த மாணவியை மீட்டுள்ளனர்.
பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பள்ளி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென்று பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் வகுப்பறைக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பள்ளி முதல்வரை முற்றுகையிட்ட உறவினர்கள், மாணவி உயிரிழப்புக்கு காரணமாக மாணவரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
பின்பு பொலிசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றினர்.