வவுனியாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கிராமமட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அவரது காரியலாயத்தில் இன்று (18.12.2016) இடம்பெற்றது.
இனப்படுகொலை மற்றும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றத்திற்கு சர்வதேச விசாரணையை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மூன்று முக்கியமான தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் அவர் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் எமக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அந்த வகையில் அம்மையாரின் இழப்பு என்பது ஈழமக்களுக்குப் பேரிழப்பாகும் என இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டோரால் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதிநிதிகளினால் எதிர்வரும் சனிக்கிழமை (24.12.2016) காலை 10மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வை நடாத்துவதற்கு இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதுடன் ஏற்பாடுகளையும் கலந்து கொண்ட அமைப்புக்கள் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள், கல்விச் சமூகங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் இதனை தனிப்பட்ட அழைப்பாக எற்றுக்கொள்ளுமாறும் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.