வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் 5 வாக்கெடுப்பு நிலையங்கள் : 7 பேர் களத்தில்!!

365

 
வவுனியாவில் இன்று (18.12.2016) இடம்பெற்றுவரும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் 5 வாக்கெடுப்பு நிலையங்களில் 7 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மொத்தம் 3960 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வவுனியா பிரிவில் 1291 பேரும், வவுனியா தெற்கில் 603 பேரும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 553, செட்டிகுளம் பிரிவில் 1526 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று (18.12.2016) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவு பெற இருப்பதாக வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இன்றைய இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பெருமளவு இளைஞர்கள் யுவதிகள் காலையிலே வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது.