வவுனியாவில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வயோதிபப் பெண் பொலிசாரால் மீட்பு!!

325

 
வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70 வயதுடைய வயோதிபத் தாய் இன்று (18.12.2016) மாலை 5.30 மணியளவில் பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்துவந்த 70 வயதுடைய வயோதிபப் பெண்ணின் கணவன் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் உறவினருடைய வீட்டிற்கு கொழும்பு சென்றுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண் கடந்த சில தினங்களாக அருகிலுள்ள கடையில் சாப்பாடு எடுத்துச்சாப்பிட்டு வந்துள்ளார். எனினும் நேற்றும் இன்றும் குறித்த வயோதிபர் வெளியே செல்லாததால் சந்தேகம் ஏற்பட்ட பக்கத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் பெண் பொலிஸாரின் உதவியுடன் பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்றபோது குறித்த வயோதிபப் பெண் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.