வவுனியா பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சார விழா 2016!!

304

 
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சார விழா 2016 இன்று 18.12.2016 பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இரண்டாம் நாள் நிகழ்வாக நடைபெற்றது.

கா.உதயராசா (பிரதேச செயலாளர் வவுனியா ) தலைமையில் ஆரம்பமான இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக ரிஷாட் பதியுதீன் (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்), முதன்மை விருந்தினர்களாக சிவசக்தி ஆனந்தன் (வன்னி பாராளுமன்ற உறுப்பினர்), சி.சிவமோகன் (வன்னி பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் விஷேட விருந்தினராக ப.சத்தியலிங்கம் (வட மாகாண சுகாதார அமைச்சர்), சிறப்பு விருந்தினர்களாக ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, கே.பி.ஜெயதிலக, செந்தில்நாதன் மயூரன் ஆகிய வட மாகாண சபை உறுப்பினர்களும்,

வவுனியா மாவட்ட மேலதிக அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார் கௌரவ விருந்தினர்களாக வனஜா செல்வரட்ணம் (பண்பாட்டலுவல்கள் திணைக்களம்), மு.இராதகிருஸ்னன் (வலயகல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு) மற்றும் அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கலைஞர்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கௌரவப்படுத்தினார். தமிழர் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.