1967ம் ஆண்டில் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாகத் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ்த்திரையுலகில் முடிசூடா ராணியாகக் கோலோச்சிய இவர் பின்னர் இந்தித் திரையுலகிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.
இந்தித் திரையுலகத் தயாரிப்பாளரான போனிகபூரை மணந்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு பெண்கள் உள்ளனர். ஸ்ரீதேவியின் மகள்கள் மட்டுமின்றி அவரும் தன் கணவரை அப்பா என்றே அழைக்கின்றார்.
கபூர் முன்னிலையில் ஸ்ரீதேவி சிறுபெண்ணாக மாறி தனது குழந்தைக் குரலில் அப்பா என்று கூப்பிட்டு சந்தோஷிப்பதை அவர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அறிவர்.
கபூரின் எந்த செயலையும் உடனே மன்னிக்கும் குணமுடைய ஸ்ரீதேவி அவரின் ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் விரும்புவதில்லையாம். ஏதாவது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது தன்னுடைய தலை முடியை இழுக்கும் பழக்கம் போனிகபூரிடம் உண்டு.
ஏற்கனவே தலை வழுக்கையாக இருப்பதால் அடிக்கடி இதுபோல் செய்வது வழுக்கையை அதிகரிக்கும் என்று ஸ்ரீதேவி அவரிடம் கண்டிப்பு காட்டுவாராம்.