இந்தோனேஷிய விமானப்படையின் விமானமொன்று இன்று வீழ்ந்ததால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.35 மணியளவில் இவ் விமானம் விபத்துக் குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ் விமானத்திலிருந்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






