16 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

273

மதவாச்சி, ரம்பாகுலம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதவாச்சி, ரம்பாகுளம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இளைஞரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.