தனியியங்கி படிகள் மூலம் மேல் கட்டிடத்திற்கு செல்ல முனைந்தப் பெண் அணிந்திருந்த கீல்ஸ் வகை பாதணியால் சுயகட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.
தென்சீனாவில் அமைந்துள்ள நான்னிங் புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்தப் பெண் அணிந்திருந்த பாதணியானது அவரின் உடல் சமனிலையை பேணமுடியாதவாறு சரியவே அவர் பிடிமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் கீழே விழுந்துள்ளார்.
அத்தோடு அவர் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் தழைகழாக உருண்டு சென்றுள்ளார் என்பது புகையிரத நிலையத்தில் உள்ள கண்கானிப்பு கமாராவில் பதிவாகியுள்ளது. எனினும் குறித்த பெண் சிரியளவிலான காயங்களுடன் தப்பித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் சீனாவில் இடம்பெறுவது வழக்கமாகியுள்ளது. அண்மையில் தந்தை ஒருவர் தனது இரண்டு வயது மகனை வணிகவளாகத்தின் மேல் தட்டிற்கு தூக்கி செல்கையில் படிகளில் பிடிமானம் இல்லாத நிலையில் கீழே விழுந்து அக்குழந்தை இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






