பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகனின் சிகையலங்காரம் காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
வடமேற்கு லண்டனில் வசிக்கும் கிறேக் இமானுவேல் (37), லூஸி தம்பதியின் 7 வயது மகனான மெக்கன்ஸி உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகிறான்.
அண்மையில் மெக்கன்ஸி தலைமயிர் வெட்டிக்கொண்ட பின்னர் பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை அதிகாரிகள் மேற்படி சிகையலங்காரத்துக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
மெக்கன்ஸியின் தலையில் ஒரு புறத்திலுள்ள மயிர் மழிக்கப்பட்டு இருந்தது. கிறேக் இமானுவேலையும் அவரின் மனைவி லூஸியையும் பாடசாலைக்கு அழைத்த அதிகாரிகள், இத்தம்பதியின் மகனின் இச்
சிகையலங்காரம் பாடசாலை மாணவனுக்குப் பொருத்தமானதல்ல, இது ஏனைய மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் எனவும் தெரிவித்தனர்.
இதனால் மெக்கன்ஸியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினர். மெக்கன்ஸியின் தலைமயிர் மீண்டும் வளர்ந்த பின்னரே அவனை மீண்டும் வகுப்பறைக்கு அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.
இதனால் தனது மகனை முறையாக பராமரித்து அவன் மீண்டும் பாடசாலைக்குச் செல்வதை உறுதிப்படுத்துவற்காக, தனது தொழிலை ராஜினாமா செய்துள்ளதாக கிறேக் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் பணியாற்ற ஆரம்பித்து 5 நாட்களில் தான் இத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். “நான் அண்மையிலேயே அங்கு பணியாற்ற ஆரம்பித்தேன்.
எனவே எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாத சக ஊழியர்களுடன் பேசி எனது வேலைநேரத்தை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. எனவே எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்” என்கிறார் கிறேக் இமானுவேல்.






