பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம் : 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்கள்!!

340

இந்திய தலைநகர் டெல்லியில் 2 இளைஞர்கள் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அகடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் உத்தம்நகர் பகுதியில் குறித்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 13 ஆம் அதிகதி குறித்த இளைஞர்கள் இருவரில் ஒருவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பாதிக்கப்பட்ட சிறுமியை அவர்கள் அழைத்துள்ளனர்.

நண்பர்கள் என்பதால் குறித்த சிறுமியும் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு வழங்கிய குளிர் பானத்தில் போதை மருந்து கலந்துள்ளனர்.

இதனையடுத்து சுயநினைவை இழந்த சிறுமியை தோழி என்றும் பாராமல் அந்த இளைஞர்கள் இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளனர்.

தொடர்ந்து குறித்த சிறுமியை டெல்லியில் உள்ள மருத்துவமனை வளாகத்தின் அருகாமையில் கைநெகிழ்ந்துவிட்டு இருவரும் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் இளைஞர்கள் இருவர் பேரிலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.