​வவுனியாவில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் நன்றி தெரிவிப்பு!!

307

 
தனது வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக வவுனியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்துள்ளார்.

மேலும், இனம், மதம் பேதமின்றி அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்ட ஸ்ரீகரன் கேசவன் வெற்றி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், தனக்கு பாரிய பொறுப்பினை வழங்கியுள்ளீர்கள். தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிச்சயம் சரிவர மேற்கொள்வேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.