வவுனியாவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிய இரு இளைஞர்கள்!!

328

வவுனியா பாலமோட்டை நவ்வி கிராமத்தில் நேற்று (18.12.2016) காலை தனிமையில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடிய இரு இளைஞர்களை அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றபோது தமது மோட்டார் சைக்கிலை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படுட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

நேற்று காலை பாலமோட்டை நவ்வி கிராமத்தில் தனிமையில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுண் சங்கிலியுடன் தனது தாலியை இணைத்து போட்டுள்ளார்.

வீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் எதிரே பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் சென்ற இரு இளைஞர்கள் அப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அப் பெண்ணின் கூச்சல் காரணமாக அப்பகுதியில் ஒன்றினைந்த பொதுமக்கள் திருடர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கில் செல்ல முடியாத காரணத்தினால் திருடர்கள் செலுத்தி வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிலை வீதியில் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மோட்டார் சைக்கிலைக் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிலில் பின்னால் அமர்ந்து சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த இளைஞன் ஏற்கனவே பிறிதொரு குற்றச் செயலுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.