கடத்தல் நாடகமாடி தந்தையிடம் கப்பம் கோரிய மகன்!!

668

கல்விப் பொது தரா­தரப் சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­றிய மாணவன் ஒருவன் தனது இரு நண்­பர்­க­ளுடன் இணைந்து கடத்தல் நாடகம் ஆடி தந்­தை­யிடம் எட்டு கோடி ரூபா கப்பம் கோரிய சம்­ப­வ­மொன்று தங்­கொட்­டுவ பொலிஸ் பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.

தங்­கொட்­டுவ கோண­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரி­டமே இவ்­வாறு அவ­ரது மகன் கப்பம் கோரி­ய­தாக தங்­கொட்­டுவ பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மோரக்­குளி மற்றும் தங்­கெட்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 வய­து­டைய இரு நண்­பர்­களே குறித்த மாண­வ­னுடன் இணைந்து இவ்­வாறு கடத்தல் நாடகம் ஆடி­யுள்­ளனர்.

கடந்த 13 ஆம் திகதி மாலை­வே­ளையில் வேன் ஒன்றில் வந்­த­வர்கள் குறித்த மாண­வனை கடத்தி சென்­ற­தா­கவும் அவரை விடு­விப்­ப­தாயின் எட்டு கோடி ரூபாவை கப்­ப­மாக வழங்­கு­மாறும் கடத்­தப்­பட்ட மாண­வனின் தந்­தைக்கு தொலை­பே­சி­யூ­டாக அழைப்பு விடுத்து மிரட்­டப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த தங்­கொட்­டுவ பொலிஸார் கடத்­தப்­பட்­டாக கூறப்­படும் மாண­வனை தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் கைவி­டப்­பட்ட எண்ணெய் ஆலை­யொன்­றி­லி­ருந்து மீட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து துரி­த­மாக செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட ஏனைய இரு மாணவர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.