வவுனியா மாவட்ட மாற்றாற்றல் உடையோர் தினவிழா!!

450

 
வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்துடன் சீட், ஓகன், வரோட், உயிரிழை, என்பன இணைந்து நடாத்தும் சிறப்புத்திறனாளிகளின் உணர்வுகளை வென்றெடுக்கும் மாற்றாற்றல் உடையோர் தினவிழா இன்று (19.12.2016) காலை 8 மணியளவில் வவனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி பேரூந்தகளில் ஆசன ஒதுக்கீட்டு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்று வவுனியா பேரூந்து தரிப்பிடத்திலிருந்து பிரதான கண்டி வீதிவழியாக விசேட தேவையுடையோரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்கள் மீதான சமூக அக்கறையை ஈர்ப்பதற்குமாக விழிப்புணர்வுப் பேரணி வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்து நிகழ்வுகள் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், ஓகன் நிறுவனத் தலைவர் வே.சுப்பிரமணியம், வரோட் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை ஜேண் கிறிஸ்ரி, உயிரிழை நிறுவன தலைவர் வி.ஜெயகாந்தன், பொதுமக்கள், சமயத்தலைவர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாற்றாற்றல் உடையொர்களின் நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.