வவுனியாவில் தங்கச் சங்கிலி அறுப்பில் தொடர்புபட்ட இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது!!

455

வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் நேற்று(18.12.2016) காலை வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியினை அறுத்துக் கொண்டு பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் ஓடிய இரு இளைஞர்களை குறித்த பெண்கூக்குரலிட்டதையடுத்து அப்பகுதி மக்கள் இளைஞர்களையும் துரத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வீதி சீரின்மை காரணமாக மோட்டார் சைக்கிலினை கைவிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து நேற்று அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

மோட்டார் சைக்கிலில் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற இளைஞர் பிறிதொரு குற்றச் செயலுடன் தொடர்புபட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

அதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த ஓமந்தைப் பொலிசார் இன்று(19.12.2016) காலை இரு நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.