உறக்கத்திலிருந்த கணவனின் சொத்துக்களை திருடிய மனைவி!!

368

மதுரங்குளி, கடயாமட்டே பிரதேசத்தில் 20 வயதுடைய மனைவி ஒருவர், 45 வயதுடைய கணவனின் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிக் கொண்டு தலைமறைவாகி இருப்பதாக முந்தலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குறிய குறித்த பெண் தனது கணவனுடைய 41,70,000 ரூபா பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

கணவன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இவ்வாறு திருடிக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.