வவுனியாவில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய 50ற்கு மேற்பட்டோர் கைது!!

302

 
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு, காஞ்சிரமோட்டை, வெடிவைத்தகல், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட முரளி மரங்களைத்தறித்தறித்து அதன் முரளிப் பழங்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர்களை நேற்றும் நேற்று முன்தினமும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் பதவியா, ஹெப்பிட்டிக்கொலாவ, நெடுங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.