இப்போது இணையத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படுபவன் நானே, இதனால் தூக்கத்தை கெடுத்துக் கொண்டவனும் நானே இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை உறுதியாக கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.
நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் இணையத்தளங்களில் தினமும் அதிகவான அவமதிப்பு மற்று அவதூறுக்கு உள்ளாக்கப்படும் நபராக தான் உள்ளதாகவும், அதன் காரணமாகவே நான் இணைய பாவனையே இப்போது செய்வதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேபோல் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் இணைய பாவனை செய்ய வேண்டாம் என நான் உத்தரவிட்டுள்ளேன். விமர்சனங்களுக்கு பின்னால் சென்று எமது நேரத்தை வீணடித்துக்கொள்ளாமல் எமக்குரிய வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன்.
ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாக தடுக்கப்பட வேண்டும். அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
இதேவேளை சிறைச்சாலைக்குள் விஷேட சலுகைகள் வழங்கப்படுகின்றதா? அரசியல் தலைவர்கள் வேறு வகையில் கவனிக்கப்படுகின்றார்களா? என்ற கருத்துகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முக்கியமாக தராதர அடிப்படையில் சிறைச்சாலைகள் செயற்படுகின்றதா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.